Wednesday, December 31, 2008

பிரிவு

உன்னை விட்டு பிரிந்த பொது
உணர்ந்தேன் -
உன் மீது எனக்கிருந்த
காதலை !!!

Tuesday, September 30, 2008

இரவு

சுட்டெரிக்கும் சூரியனுக்கும்
உழைத்து களைத்தவர்களுக்கும்
இது ஓய்வு நேரம் !!
தூங்கிய நிலவு
நம்மை
தூங்க வைக்க
உலா வரும் நேரம் !!
மறைந்திருந்த நக்ஷத்திரங்கள்
மினுமினுக்க
விண்ணில் உதிக்கும் நேரம் !!
காத்திருந்த காதலர்கள்
தழுவிக்கொள்ள
இது சிறந்த நேரம் !
ஓசைகளும் அனைத்தும்
அடங்கி
தாலாட்டு மட்டும் கேட்க்கும் நேரம் !!

உயிர்கள் உறங்கும் நேரம் !!
இதயங்கள் இணையும் நேரம் !!
நிலவு உலவும் நேரம் !!
இது இரவு நேரம் !!!!

Sunday, September 28, 2008

மாலை நேர சூரியன் !!

ஆயிரம் ஆயிரம் கரங்கள் கொண்டு,
உலகுக்கெல்லாம் ஒளி தந்து ,
சுட்டெரிக்கும் வெப்பம் தந்து ,
எவரும் எட்ட முடியாத ,
அல்ல அல்ல
எவரும் காண முடியாத படி -
உல்லாசமாய் வலம் வருவாய் !!

இப்பொழுது நீ உண்டு ,
உன் கரங்கள் இல்லை !
ஒளி உண்டு
சுட்டெரிக்கும் வெப்பம் இல்லை !!
தொட முடியாவிடினும்
கண்குளிர காண முடியும் !!!
இப்படியே என்றும் நீ இருக்க
ஏங்குகின்றது என் மனம் !
இப்படியே நீ நின்று விட
ஏங்குகின்றன என் கண்கள் !!

உன் வெப்பத்தை குறைத்து
சிகப்பு நிறம் கொண்டு ,
விண்ணில் ஓர் சிகப்பு தாமரையாய்
நிற்கின்றாய் !! ரசிக்கின்றேன் !!!

Friday, September 26, 2008

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் - IHM

ஆயிரம் ஆயிரம் தோழிகள் உண்டு
உன்னை வாழ்த்த !
அதில் ஒன்றை இங்கு வந்தேன்
ஏன் எண்ணம் சொல்ல !!

பிறந்த நாட்டை பிரிந்த சோகம் உண்டு
உன்னை காணும் வரை !
தோழிகள் இல்லை என்றொரு ஏக்கம் உண்டு
உன்னை காணும் வரை !!
தனிமை என்றொரு எண்ணம் வாடியதுண்டு
உன்னை காணும் வரை !!!

ஒளிந்திருக்கும் திறமையை
வெளிக்கொண்டு வந்தாய் !
எங்கோ இருந்க்கும் மக்களை
ஓரிடத்தில் தந்தாய் !!
மனதிலிருக்கும் சுமையை
இறக்க இடம் தந்தாய் !!!
எவ்வித குழப்பத்திற்கும்
நொடியில் பதில் தந்தாய் !!!

ஒரு வயது குழந்தை நீ !
உன்னை பெற்றவள் ஒருத்தி ,
காப்பவர்கள் ஐந்து பேர் ,
வளர்ப்பவர்களோ ஆயிரம் ஆயிரம் பேர் !!
அனைவரின் ஆதரவில் செம்மையாக வளர்க நீ !!!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!!

Monday, September 8, 2008

உன்னோடு !!!

கொட்டும் மழையில்
உன்னோடு ஓர் குடையில்
நடப்பதும் சுகமே !
அத்துணை துன்பத்திலும்
நீ தரும் ஆறுதல் வார்த்தையை
கேட்பதும் சுகமே !
ஆயிரம் குழப்பத்திலும்
உன்னுடன் இருக்கும்
அமைதியும் சுகமே !
எத்துனை வயதானாலும்
உன்னோடு செய்யும்
குறும்பும் சுகமே !
உன்னோடு வாழ்ந்தால்
இம்மண்ணும் ச்வர்கமே !

Friday, June 27, 2008

பெண்ணை உன் பரிமாணம்

நீ மகளாய் இருக்கும் பொழுது ---

உன் தாய் உன்னை
முழுதாய் புரிந்தவளென்பதை
மறக்காதே !
இதை புரிந்து கொள்ள
நீ தாயகும்வரை
காத்திருக்காதே!!

நீ காதலியாய் இருக்கும் பொழுது --

அவனிடம் கொண்ட
நட்பை மாற்றாதே !
விட்டுக்கொடுத்து போக
மறக்காதே !!

நீ மனைவியாய் இருக்கும் பொழுது --

உன் காதலை மறக்காதே !
அப்போது விட்டுக்கொடுத்ததை
இப்போது பிடிக்க எண்ணாதே !!
அவனை மட்டும் விரும்பியது
போதும் !
அவன் சுற்றத்தை விரும்ப
கற்றுகொள் !!
உன்னை போல் அவனுக்கும்
அவன் தாய் தான்
தெய்வம் என்பதை மறக்காதே !!!

நீ நாத்தனாரை இருக்கும் பொழுது ---

நீ உன் புகுந்த வீட்டில்
பெற்ற இன்னல்களை
உன் வீட்டில் வந்தவள்
அனுபவிப்பாள் !
இதை மறக்காதே !!
உன் தாய் அவளுக்கு
மாமியார் !
உன் மாமியார் உனக்கு செய்ததை
உன் தாய் அவளுக்கு செய்வாள் !
இதை ஒப்புகொள்ளவிடினும்
உணர கற்றுக்கொள் !!

நீ மாமியாராய் இருக்கும் பொழுது --

உன் மருமகள்
உன் மகனை எடுத்து செல்ல வரவில்லை !
அவனுடன் கலக்க வந்தவள் !!
உன் மகளின் மாற்றத்தை
முன்னேற்றம் என்று சொல்லும் நீ
உன் மருமகளின் மாற்றத்தை
திமிரேற்றம் என்று சொல்லாதே !!!

நீ பாட்டியாகும் பொழுது --

உன் பேரக்குழந்தைகளை
பார்த்து ரசி !!
அவர்களை தாலாட்ட எண்ணாதே !
அது பெற்றவளின் உரிமை !
அதை பறிக்க எண்ணாதே !!
அவர்களை வாழ்த்து !
வளர்க்க எண்ணாதே !!

இன்பமாய் இருக்க ஆயிரம் வழி உண்டு !
நீ வாழ இன்னொருத்தி கண்ணீர் வேண்டுமா ??

எது என் வீடு

என் தோழியிடம் சொன்னேன்
" என் வீட்டுக்கு நீயும் வா " என்று !
என் தாய் சொன்னாள்
" நம் வீட்டு கதவை பூட்டு " என்று !

திருமணத்திற்கு முதல் நாள்
என் தாய் சொன்னாள்
" நம் வீட்டு சாவி பத்திரம் " என்று !!

திருமணத்திற்கு பிறகு -----

புகுந்த வீட்டில்
கணவன கேட்டான்
" உன் வீட்டில் உன் அம்மா நலமா ? " என்று !

பிறந்த வீட்டில்
தாய் கேட்டாள்
" உன் வீட்டில் உன் கணவன் நலமா ? " என்று !!

நான் இருவரிடமும் கேட்டேன்
" இப்பொழுது எது என் வீடு என்று "