Monday, March 31, 2008

இலை உதிர் காலம் -- 2

துளிர்விடும் போது
பச்சைபசேலென
கண்ணுக்கு விருந்தளித்தாய் !

வாழும் போது
கம்பீரமாய் நின்று
இளைப்பாற நிழல் கொடுத்தாய் !!

வாடும் போதும்
வண்ணவண்ண இலைகளால்
மனதிற்கு சுகம்தருகிறாய் !!!

இதுபோல் வாழ ஓர்
வரம் தா இறைவா !!!!

Wednesday, March 26, 2008

காதல்



நீ கிசுகிசுத்தது என்
காதுகளில் அல்ல !
இதயத்தில் !!
நீ முத்தமிட்டது என்
இதழ்களில் அல்ல !
உணர்வில் !!
நீ பிரிந்தது என்
உடலை அல்ல
உயிரை !!!

ரசிகன்

குழந்தை சிரிக்கும்போதும்
மழலை கேட்கும்போதும்
தென்றல் வீசும்போதும்
மொட்டு மலரும்போதும்
குமரி கடக்கும்போதும்
அலை அடிக்கும்போதும்
உன்னை மறந்தால்
நீயும் கவிஞனே !!!

Tuesday, March 18, 2008

இலை உதிர் காலம்


பச்சை பசேல்லென
கண்ணுக்கு குளுமயளித்தாய்
கண் கொட்டாமல் ரசித்தேன் !!
மனம் வீசும் மலர்களால்
கூந்தலை அலங்கரித்தாய்
பெருமிதம் கொண்டேன்!!
சுவை மிகுந்த பழத்தால்
நாவிற்கு விருந்தளித்தாய்
சுவைத்து உண்டேன் !!
வண்ண வண்ண இலைகளால்
மனதை மகிழ்வித்தாய்
உன் வாட்டம் புரியாமல் மகிழ்ந்தேன் !!
உதிரும் பொழுதும்
இன்பம் தருகிறாயே
உன்னை எண்ணி நெகிழ்கிறேன் !!
என் உளமார வாழ்த்துகிறேன் !!

கவிஞன்

சில்லென வீசும் காற்றுக்கும்
ஓயாத கடல் அலைக்கும்
மேகங்கள் படர்ந்திருக்கும் விண்ணுக்கும்
காடுகள் அடர்ந்திருக்கும் மண்ணுக்கும்
உண்டு எல்லை !!
கவிஞனே உன் எண்ணத்திற்கு என்றும்
இல்லை எல்லை !!

Monday, March 17, 2008

இதயம்


மலருக்காக வண்டு துடிக்க
மழைக்காக மண் துடிக்க
கண்ணுக்காக இமை துடிக்க
கண்ணனுக்காக மீரா துடிக்க
எனக்காக நீயோ என்றும் துடிக்க !!

Friday, March 14, 2008

நீயும் நானும்

வானமும் மேகமுமாய்
நீயும் நானும்
இருப்போம் ஏன்ற கவிதையை
அழித்துவிட்டேன் !!
இரண்டுக்கும் இடையில்
நீயும் நானும்
விமானத்தில் சென்ற
நொடியில் !!