Wednesday, May 21, 2008

கடல்

உன் எல்லை
காணமுடியாது !
உன் அலைகளை
எண்ணமுடியாது !!
உன் ஆழம்
அறியமுடியாது !!!

அளவில்லா மீன்களின்
இருப்பிடம் நீ !
எண்ணற்ற மக்களின்
அன்னை நீ !!
கணக்கில்லா கப்பல்களின்
நம்பிக்கை நீ !!!

இந்த நம்பிக்கை
உடையலமா ?
அன்னை பிள்ளையை
துரக்கலாமா ?
உன் கரையை நீ
கடக்கலாமா ?

Friday, May 2, 2008

வாழ்வின் சிறந்த நொடி

மௌனமாய் அமர்ந்திருந்தேன்
தனிமையை துணையாய் கொண்டு !

மின்னலாய் வந்தான் ஒருவன் ---
*** கையில் மலர் சண்டுடன்
***முகத்தில் புன்னகையுடன்
***மனதில் காதலனுடன் !!

அந்த நொடி ---
*** தனிமை அகன்றது
***மௌனம் கலைந்தது
***காதல் மலர்ந்தது !!

அவனிடம் ---
***தாயின் பாசம் கண்டேன்
***தந்தையின் கனிவு கண்டேன்
***தமையனின் துணை கண்டேன்
***தோழியின் நட்பு கண்டேன்
***புதியதாய் காதல் கண்டேன்!!

இன்றும் மறவாத நொடி அது !
என்றும் மறக்க இயலாத நொடி அது!!
அனைவரும் கடக்கும் நொடி அது !
என் வாழ்வின் சிறந்த நொடி அது !!