Friday, April 18, 2008

வந்தது வசந்தம் !!!


வாடிய செடி கொடிகளை
துளிர்க்க சொல்ல
வந்தது வசந்தம் !!!
பூக்க மறந்த மரங்களை
மலர சொல்ல
வந்தது வசந்தம் !!!
மண்ணில் புதைந்த புற்களை
துளிர்க்க சொல்ல
வந்தது வசந்தம் !!!
கூட்டில் இருந்த பறவைகளை
பறக்க சொல்ல
வந்தது வசந்தம் !!!
அவை இன்று பாடும் கீதம்
" வந்தது வசந்தம் !"

Saturday, April 5, 2008

கண்ணீர்


ஊமையாய் இருக்கும் இதயத்தின்
வார்த்தைகளை சொல்லும் மொழி !
ஓராயிரம் சொற்கள் சொல்லமுடியாததை
நொடியில் சொல்லும் ஒரு துளி !!

Friday, April 4, 2008

மலர்


மனம் வீசும் மலரே .............

நொடி பொழுதில் மலர்ந்தாய்
கண் கவரும் வண்ணம் கொண்டு !
உன்னை கடப்பவரை கவர்ந்தாய்
மனம் மயக்கும் மணம் கொண்டு !!
யார் தந்த வாரம் உனக்கிது ??

தாய் உன்னை -
கூந்தலில் சூடினாள் ,
அழகு பார்த்தாள் ,
கண்கொட்டாமல் ரசித்தாள் ,
மணம் மகிழ்ந்தாள் !
தாய் தந்த சீதனம் நீ !!
அவளின் அழியாத நினைவு சின்னம் நீ!!!

Wednesday, April 2, 2008

மழைத்துளி

வெளியே வந்துவிட்டேன்
இனி என்ன செய்வேன் !!!

சுகமாய் இருந்தேன்
என்
தாய் மடியில் !
வெளியே வந்துவிட்டேன்
ஒரு
நொடி பொழுதில் !!

இனி என்ன செய்வேன் ?????

தாமரை இலையில் வாழ்வேனோ ?
மண்ணில் வீழ்ந்து இறப்பேனோ ?
ஓயாத கடலில் கலப்பேனோ ?
எரியும் நெருப்பென்னை விழுங்குமோ ?

இனி என்ன செய்வேன் ?????

சில்லென்ற காற்று
மெதுவாய் அடிகின்றது !
என்னை எங்கோ
கொண்டு செல்கின்றது !!

இனி என்ன செய்வேன் ?????

திறந்திருந்த சிப்பியில் விழுந்தேன் !
என் பயம் விலகியது !!
விலையுயர்ந்த முத்தை மாறினேன் !
நன்றி இறைவா !!

இளைஞனே ---
வீடு விட்டு வெளியில் வா !
பயத்தை விலக்கி
உன்னை உயர்த்து !!
நம்பிக்கை காற்றடிக்கும்
வெற்றி உனக்கே!!!