என் தோழியிடம் சொன்னேன்
" என் வீட்டுக்கு நீயும் வா " என்று !
என் தாய் சொன்னாள்
" நம் வீட்டு கதவை பூட்டு " என்று !
திருமணத்திற்கு முதல் நாள்
என் தாய் சொன்னாள்
" நம் வீட்டு சாவி பத்திரம் " என்று !!
திருமணத்திற்கு பிறகு -----
புகுந்த வீட்டில்
கணவன் கேட்டான்
" உன் வீட்டில் உன் அம்மா நலமா ? " என்று !
பிறந்த வீட்டில்
தாய் கேட்டாள்
" உன் வீட்டில் உன் கணவன் நலமா ? " என்று !!
நான் இருவரிடமும் கேட்டேன்
" இப்பொழுது எது என் வீடு என்று "
Friday, June 27, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
beautiful one.....question which arises in every married girls mind....
Post a Comment