Monday, September 8, 2008

உன்னோடு !!!

கொட்டும் மழையில்
உன்னோடு ஓர் குடையில்
நடப்பதும் சுகமே !
அத்துணை துன்பத்திலும்
நீ தரும் ஆறுதல் வார்த்தையை
கேட்பதும் சுகமே !
ஆயிரம் குழப்பத்திலும்
உன்னுடன் இருக்கும்
அமைதியும் சுகமே !
எத்துனை வயதானாலும்
உன்னோடு செய்யும்
குறும்பும் சுகமே !
உன்னோடு வாழ்ந்தால்
இம்மண்ணும் ச்வர்கமே !

No comments: