Sunday, September 28, 2008

மாலை நேர சூரியன் !!

ஆயிரம் ஆயிரம் கரங்கள் கொண்டு,
உலகுக்கெல்லாம் ஒளி தந்து ,
சுட்டெரிக்கும் வெப்பம் தந்து ,
எவரும் எட்ட முடியாத ,
அல்ல அல்ல
எவரும் காண முடியாத படி -
உல்லாசமாய் வலம் வருவாய் !!

இப்பொழுது நீ உண்டு ,
உன் கரங்கள் இல்லை !
ஒளி உண்டு
சுட்டெரிக்கும் வெப்பம் இல்லை !!
தொட முடியாவிடினும்
கண்குளிர காண முடியும் !!!
இப்படியே என்றும் நீ இருக்க
ஏங்குகின்றது என் மனம் !
இப்படியே நீ நின்று விட
ஏங்குகின்றன என் கண்கள் !!

உன் வெப்பத்தை குறைத்து
சிகப்பு நிறம் கொண்டு ,
விண்ணில் ஓர் சிகப்பு தாமரையாய்
நிற்கின்றாய் !! ரசிக்கின்றேன் !!!

No comments: