Wednesday, April 2, 2008

மழைத்துளி

வெளியே வந்துவிட்டேன்
இனி என்ன செய்வேன் !!!

சுகமாய் இருந்தேன்
என்
தாய் மடியில் !
வெளியே வந்துவிட்டேன்
ஒரு
நொடி பொழுதில் !!

இனி என்ன செய்வேன் ?????

தாமரை இலையில் வாழ்வேனோ ?
மண்ணில் வீழ்ந்து இறப்பேனோ ?
ஓயாத கடலில் கலப்பேனோ ?
எரியும் நெருப்பென்னை விழுங்குமோ ?

இனி என்ன செய்வேன் ?????

சில்லென்ற காற்று
மெதுவாய் அடிகின்றது !
என்னை எங்கோ
கொண்டு செல்கின்றது !!

இனி என்ன செய்வேன் ?????

திறந்திருந்த சிப்பியில் விழுந்தேன் !
என் பயம் விலகியது !!
விலையுயர்ந்த முத்தை மாறினேன் !
நன்றி இறைவா !!

இளைஞனே ---
வீடு விட்டு வெளியில் வா !
பயத்தை விலக்கி
உன்னை உயர்த்து !!
நம்பிக்கை காற்றடிக்கும்
வெற்றி உனக்கே!!!

1 comment:

Unknown said...

Thuligalaka irrukum un kavithaigal athunaiyum ondru sernthu, puthakkam yendra vellamaga veli vara ennathu ullamaarntha nal vaazhthukal