
மனம் வீசும் மலரே .............
நொடி பொழுதில் மலர்ந்தாய்
கண் கவரும் வண்ணம் கொண்டு !
உன்னை கடப்பவரை கவர்ந்தாய்
மனம் மயக்கும் மணம் கொண்டு !!
யார் தந்த வாரம் உனக்கிது ??
தாய் உன்னை -
கூந்தலில் சூடினாள் ,
அழகு பார்த்தாள் ,
கண்கொட்டாமல் ரசித்தாள் ,
மணம் மகிழ்ந்தாள் !
தாய் தந்த சீதனம் நீ !!
அவளின் அழியாத நினைவு சின்னம் நீ!!!
No comments:
Post a Comment