
வாடிய செடி கொடிகளை
துளிர்க்க சொல்ல
வந்தது வசந்தம் !!!
பூக்க மறந்த மரங்களை
மலர சொல்ல
வந்தது வசந்தம் !!!
மண்ணில் புதைந்த புற்களை
துளிர்க்க சொல்ல
வந்தது வசந்தம் !!!
கூட்டில் இருந்த பறவைகளை
பறக்க சொல்ல
வந்தது வசந்தம் !!!
அவை இன்று பாடும் கீதம்
" வந்தது வசந்தம் !"
No comments:
Post a Comment