Tuesday, March 18, 2008

இலை உதிர் காலம்


பச்சை பசேல்லென
கண்ணுக்கு குளுமயளித்தாய்
கண் கொட்டாமல் ரசித்தேன் !!
மனம் வீசும் மலர்களால்
கூந்தலை அலங்கரித்தாய்
பெருமிதம் கொண்டேன்!!
சுவை மிகுந்த பழத்தால்
நாவிற்கு விருந்தளித்தாய்
சுவைத்து உண்டேன் !!
வண்ண வண்ண இலைகளால்
மனதை மகிழ்வித்தாய்
உன் வாட்டம் புரியாமல் மகிழ்ந்தேன் !!
உதிரும் பொழுதும்
இன்பம் தருகிறாயே
உன்னை எண்ணி நெகிழ்கிறேன் !!
என் உளமார வாழ்த்துகிறேன் !!

No comments: